செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஒன்றரை வருடத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒரு இலட்சம் பேர் கைது!

ஒன்றரை வருடத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒரு இலட்சம் பேர் கைது!

1 minutes read

மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரும், போக்குவரத்து ஒழுங்கை விதிகளை மீறியமை தொடர்பில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், புதன்கிழமை ஏற்பட்ட 3 வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். இம்மாதம் 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 23 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 286 காயமடைந்துள்ளதோடு மொத்தமாக 430 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More