செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மேலும் 310 பேருக்கு கொரோனா – உயிரிழப்பு 476ஆக அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 310 பேருக்கு கொரோனா – உயிரிழப்பு 476ஆக அதிகரிப்பு!

1 minutes read

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், 79 ஆயிரத்து 422 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 3 ஆயிரத்து 654 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் மேலும் 5 கொவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளன என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கனேமுல்லை, கொழும்பு – 10, புளத்கோஹூபிட்டிய, கண்டி மற்றும் பூஜாப்பிட்டி ஆகிய பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், 73 வயதுடைய பெண், 75 வயதுடைய ஆண் , 83 வயதுடைய ஆண், 61 வயதுடைய ஆண் மற்றும் 75 வயதுடைய பெண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொவிட் 19 தொற்றுடன் சிறுநீரக தொகுதி புற்று நோய், மோசமடைந்த நீரிழிவு, கொவிட் நிமோனியா, இதயம் செயலிழந்தமை ஆகியன அவர்களின் மரணத்திற்கான காரணமென அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை பதிவான கொவிட் 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 476 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More