செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இரணைதீவில் கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானமில்லை | அரசாங்கம்

இரணைதீவில் கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானமில்லை | அரசாங்கம்

1 minutes read

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இரணைதீவு பிரதேசத்தில் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. மட்டக்களப்பு – ஓட்டமாவடி பிரதேசத்திலே அடக்கம் செய்வதற்கே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனவே இரணைதீவு தொடர்பில்  சுகாதார அமைச்சினால் தொழிநுட்ப ரீதியாக ஆராய்ந்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால், ‘கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக’ அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பையடுத்து எதிர்க்கட்சி உள்ளிட்ட வெவ்வேறு தரப்பினரால் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதோடு , இரணைதீவு மக்களால் எதிர்ப்பும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More