செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மக்களின் அபிலாசைகளை படுகுழிக்குள் அரசாங்கம் தள்ளியுள்ளது!

மக்களின் அபிலாசைகளை படுகுழிக்குள் அரசாங்கம் தள்ளியுள்ளது!

0 minutes read

அரசாங்கம், தனது பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக வாக்களித்த 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் அபிலாசைகளை படுகுழிக்குள் தள்ளியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தற்போதைய செயற்றிட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் ஊழல் மற்றும் மோசடி ஆகியன அதிகரித்துள்ளன.

இந்நிலையில் உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல் நீண்டுக்கொண்டு இருக்கின்றது.

அரசாங்கம் அதன் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக வாக்களித்த அனைத்து மக்களினதும் அபிலாசைகளை படுகுழிக்குள் தள்ளியுள்ளது.

பொய்களை பரப்புவதன் ஊடாக மக்கள் எதிர்ப்பை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் அதற்கான தீர்வுகளை தேடுகிறது.

மேலும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அரசாங்கத்தைச் சேர்ந்த சில அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்களும் கூட்டங்களும் நடந்துள்ளன என்ற ஆதாரமற்ற செய்திகளை உருவாக்குவது அரசாங்கத்தின் குறைந்த மனநிலைமையை காட்டுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More