செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா மூன்று உயிரிழப்புகள் பதிவு!

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா மூன்று உயிரிழப்புகள் பதிவு!

1 minutes read

அவிசாவளை, கந்தான மற்றும் கல்பாத்த ஆகிய பகுதிகளிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

92 வயதுடைய ஆணொருவரும் 70 வயதுடைய பெண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 647ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 997 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 94 ஆயிரத்து 577 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 7 ஆயிரத்து 152 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More