செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கையை வந்தடைந்தது!

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கையை வந்தடைந்தது!

1 minutes read

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கையை வந்தடைந்துள்ளது.

இதன்படி, முதல் தொகுதியில் 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்தத் தடுப்பூசிகளை பொறுப்பேற்பதற்காக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றிருந்ததுடன் அவரால் பொறுப்பேற்கப்பட்ட தடுபூசிகள் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை நாட்டின் அவசரத் தேவைக்காகப் பயன்படுத்துவதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இதற்கமைய, ஏழு மில்லியன் தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More