செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாடு முழுவதும் சுமார் 11,542 பேர் பாதிப்பு!

நாடு முழுவதும் சுமார் 11,542 பேர் பாதிப்பு!

0 minutes read

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சபரகமுவ, மேல், வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் 2,750 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கேகாலை மாவட்டத்தின் வரகாபொலவிலும், காலி மாவட்டத்தின் நாகொடவிலும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.

அந்த அறிக்கையின்படி, வீடுகளுக்கு முழுமையான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் 205 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பில் உள்ள 42 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More