செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மன்னாரிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

மன்னாரிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

1 minutes read

முள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்று (18.05.2021) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணியளவில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம் பெற்றது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மத தலைவர்கள்,மன்னார் நகர முதல்வர்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மாலை அணிவித்து சுடரேற்றி , மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து உப்புக்கஞ்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More