செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பட்டினியால் தவிக்கும் வவுனியா- கற்குளம் மக்கள்

பட்டினியால் தவிக்கும் வவுனியா- கற்குளம் மக்கள்

0 minutes read

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக வவுனியா- கற்குளத்தில் வாழும் பெரும்பாலான மக்கள், தினக்கூலி வேலைக்குச் செல்ல முடியாதமையினால் அவர்களது குடும்பம் பட்டினியினால் வாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சிதம்பரபுரம்- கற்குளம் படிவம் பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விறகுவெட்டுதல், மேசன் வேலை, கூலி வேலை ஆகியவற்றுக்குச் சென்றே வருமானத்தினை பெற்று வந்தனர்.

இந்நிலையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக, உணவின்றி பட்டிணியால் வாடும் நிலைமையை அவர்கள்எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கைக்குழந்தைகள் முதியவர்களுடன் குடிசை வீடுகளில் வாழ்ந்து வரும் இவர்கள், பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளமையினால் நோயாளிகளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதிலும் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More