செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாராளுமன்ற அமர்வுகள் ஒரு நாளுடன் நிறுத்தப்படலாம்?

பாராளுமன்ற அமர்வுகள் ஒரு நாளுடன் நிறுத்தப்படலாம்?

1 minutes read

இந்த வாரம் 8 ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பாராளுமன்ற அமர்வுகள் கூடவுள்ள நிலையில்,பாராளுமன்றத்திலும் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பாராளுமன்றத்தை கூட்டாது 8 ஆம் திகதியன்று மாத்திரம் சபை அமர்வுகளை கூட்டுவது குறித்து ஆராயப்படுகின்றதாம்.

இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் அறிவிக்கப்படும்.

நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கும் சபை அமர்வுகள் 9ஆம்,10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் கூடும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டுவார காலத்திற்குள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்தும் பாராளுமன்ற ஊழியர்கள் பலருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து நேற்று வரையில் தொடர்ச்சியாக பாராளுமன்ற காரியாலையம் மூடப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் காரியாலைய பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்த வாரத்திற்கான பாராளுமன்ற அமர்வுகளை தீர்மானிக்க கட்சி தலைவர்கள் கூட்டமும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடுகின்றது.

இதன்போது நாளைய நாளுக்கான அமர்வுகளை மாத்திரம் நடத்துவது குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊழியர்களை பணிகளுக்கு வரவழைக்க முடியாதமையே இதற்கான பிரதான காரணமாகவும் பாராளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More