செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முறையான ஆய்விற்கு பின்னர் மீன்பிடி நடவடிக்கை தொடரலாம்!

முறையான ஆய்விற்கு பின்னர் மீன்பிடி நடவடிக்கை தொடரலாம்!

1 minutes read

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை இன்று முதல் நடைபெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ளது. இது தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

சுற்றுச்சூழல், மீன்வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தி, கப்பல் தீயினால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக மதிப்பிடவும் அவர் அறிவுறுத்தல் விடுத்தார். சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து முழு இழப்பீட்டைப் பெறுவதற்கும், கப்பலை வெளியேற்றுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் பிரதமர் இதன்போது அறிவுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவித்தார்.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவை அங்கு பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தினருக்கும் இன்று வழங்கப்படும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More