செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு மேலுமொரு தொகுதி தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு மேலுமொரு தொகுதி தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!

1 minutes read

அதன்படி, 15 ஆயிரம் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து இன்று (புதன்கிழமை)) காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

முன்னதாக, ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வழங்கப்படவிருந்த தடுப்பூசிகள் குறித்து நிச்சயமற்ற நிலை இருந்தது.

தேவையான தடுப்பூசிகள் கிடைக்காத பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய ஏற்கனவே ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருவதாக சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்திருந்தார்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின்படி, ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 81 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது.

அவர்களில் 14 ஆயிரத்து 516 பேருக்கு மாத்திரமே ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More