செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கும் பிரதமருக்கு இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கும் பிரதமருக்கு இடையில் சந்திப்பு!

1 minutes read

இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எட்வட் அபல்டன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த தனது விருப்பத்தை அபல்டன் பிரதமரிடம் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடான நியூசிலாந்து இலங்கையின் பால் உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பம் மற்றும் அறிவை பகிர்ந்து கொள்ளவும் அபல்டன் விருப்பம் தெரிவித்தார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன், இதற்கு முன்னர் மேற்கொண்ட கலந்துரையாடல் குறித்து நினைவுகூர்ந்த உயர்ஸ்தானிகர் விளையாட்டின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை உறுதிப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

நட்பு நாடாக நியூசிலாந்து அரசாங்கத்துடன் எதிர்காலத்திலும் ஒத்துழைப்புடன் செயற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய பிரதமர், இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் என்ற ரீதியில் வெற்றிகரமாக சேவையாற்ற எட்வட் அபல்டனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More