செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தொழிற்சங்கங்கள் ஊடாக நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை!

தொழிற்சங்கங்கள் ஊடாக நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை!

1 minutes read

இலங்கை தொழிற்சங்கங்களின் ஊடாக நாட்டை முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய தொழிற்சங்க மையம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்குவதற்கான தீர்மானத்தை எடுக்காவிட்டால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுமென அந்த மையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் தனியார்த்துறை பிரிவுகளை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பாதுகாப்பு தொடர்பாக சிந்திக்காது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றதெனவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து குறித்த நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More