செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங்கள் -ஒருவர் படுகாயம்!

யாழில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங்கள் -ஒருவர் படுகாயம்!

1 minutes read

மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அதனால் அந்தப் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் சிறிது நேரம் பதற்றநிலை காணப்பட்டதோடு, பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாக பழக்கடை நடத்துபவர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட குழுவே ஊரடங்கு வேளையில் இவ்வாறு தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More