செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த திலீபனின் நினைவுநாள் இன்று!

அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த திலீபனின் நினைவுநாள் இன்று!

1 minutes read

இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக உணவு ஒறுப்பப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாள் இன்றாகும்.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987 செப்டெம்பர் 15 ஆம் திகதி உணவு ஒறுப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.48 மணிக்கு அவர் உயிர்நீத்தார்.

இந்நிலையில் அவரது நினைவு தினம் வருடா வருடம் நினைவேந்தல் வாரமாக தமிழர் பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

எனினும், அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More