செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி!

1 minutes read

தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டது.

பிரத்தியேகமான இடமொன்றில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது.

1987 செப்டெம்பர் 15 ஆம் திகதி, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அவர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

எனினும், அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி முற்பகல் 10.48க்கு அவர் உயிர்நீத்தார்.

இவ்வாறு அவர் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு மறைந்த காலப்பகுதி வருடாந்தம் அவருக்கான நினைவேந்தல் வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ள நிலையில், தடைகளையும் தாண்டி திலீபனுக்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More