செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இராகலையில் தீ விபத்து – ஐவர் உடல் கருகி உயிரிழப்பு!

இராகலையில் தீ விபத்து – ஐவர் உடல் கருகி உயிரிழப்பு!

1 minutes read

நுவரெலியா – இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு (வியாழக்கிழமை) 10 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர்.

தாய், 11 வயது மகள், ஒரு வயது குழந்தை மற்றும் அவர்களின் தாத்தா, பாட்டி ஆகியோரே இவ்வாறு தீயில் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

ஆர்.ராமையா 55 வயது, அவரின் மனைவியான முத்துலெட்சுமி வயது 50, இவர்களின் மகள் டிவனியா வயது 35, குறித்த மகளின் பிள்ளைகள் இருவர் என உயிரிழந்த ஐவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்த ஆர்.ராமையாவின் மருமகனான ரவீந்திரன் வயது 30 உயிர்தப்பியுள்ளார். அவர் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை. இந்தநிலையில் பல கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More