செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் அத்தியாவசிய சேவைகளை பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி!

இலங்கையில் அத்தியாவசிய சேவைகளை பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி!

1 minutes read

நாட்டில் அரச வங்கி, போக்குவரத்து, எரிபொருள், தபால் மற்றும் துறைமுக நடவடிக்கைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் காப்புறுதி, வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று ஜனாதிபதியினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை புகையிரத திணைக்களத்தின் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையினால் மேற்கொள்ளப்படும் அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த 11 ஆம் திகதி முதல், நடைமுறைக்கு வரும் வகையில், வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More