செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் தமிழர்கள் வாழ முடியாத நிலையை உருவாக்க சதி செய்கின்றது!

இலங்கையில் தமிழர்கள் வாழ முடியாத நிலையை உருவாக்க சதி செய்கின்றது!

1 minutes read

எல்லை நிர்ணயம் என்ற பெயரில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க அரசாங்கத்தால் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தின் எல்லைப் பகுதியில் இருக்கக் கூடிய கிராமங்களை வவுனியா வடக்கு பிரதேச சபைகளுடன் இணைத்து இந்த மாவட்டத்தின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க அரசாங்கத்தின் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

வவுனியா, பழைய பேருந்து நிலையம் முன்பாக தமிழர் பகுதியில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்சல் தரை காணிகளை அபகரித்து சிங்கள எல்லைக் பிரதேசங்கள் மற்றும் பொலனறுவை மாவட்டம் என்பவற்றுடன் சேர்த்துக் கொள்ளும் முயற்சிகளும் இடம்பெறுவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

திட்டமிட்ட வகையில் அனைத்து கோணங்களிலும் தமிழர்களை நசுக்கி, தமிழர்கள் தொடர்ந்தும் இந்த தீவில் வாழ முடியாத நிலையை உருவாக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More