செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு விமல், கம்மன்பிலவிடம் கோரிக்கை !

அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு விமல், கம்மன்பிலவிடம் கோரிக்கை !

1 minutes read

அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விடுத்து, அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

புத்தளத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குறித்த இருவரும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேறொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக கூறினார்.

அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளை பெற்றுக்கொள்ளும் குறித்த இருவரும் அரசாங்கத்தை விமர்சிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கேட்டுக்கொண்டார்.

அதோடு குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு பதிலாக, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இந்த விடயத்தில் ஒரு யதார்த்தமான அணுகுமுறையை எடுக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More