செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வரவு –செலவுத் திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று!

வரவு –செலவுத் திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று!

1 minutes read

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.

அதன்படி, இன்று முற்பகல் 9.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ, வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்து உரையாற்றியிருந்தார்.

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், வரிக்கொள்கைகள், மக்கள் நலத்திட்டங்கள் உட்பட வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை தமது உரையின்போது நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெளிவுப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து, 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகியது. இந்த நிலையில், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதன் பின்னர், 23ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், டிசம்பர் 10ஆம் திகதி வரவு – செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More