செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வல்வெட்டித்துறை தீருவில் திடலில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி!

வல்வெட்டித்துறை தீருவில் திடலில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி!

1 minutes read

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை, தீருவில் திடலில் மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எழுத்து மூலம் அனுமதி கோரி இருந்தார்

அதற்கு, நகரசபை தலைவர் என்.செல்வேந்திரா, “பொலிஸார் தீருவில் திடலை எந்த நிகழ்வுகளுக்கு வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளமையால், திடலில் நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது’ என எழுத்து மூலம் பதில் அளித்து இருந்தார்.

இந்நிலையில், சபை உறுப்பினர்கள் சபையை கூட்டி அது தொடர்பில் முடிவெடுக்கப்பட வேண்டும் என நகர சபை தலைவரிடம் கோரியதை அடுத்து சபைக்கூட்டம் கூட்டப்பட்ட போது, கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து, சுகாதார நடைமுறைகளுடன் நிகழ்வினை நடாத்துவதற்கு அனுமதிப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஒலிபெருக்கி சாதனங்கள் பயன்படுத்துவதாயின் அதற்காக மாத்திரமே பொலிஸாரிடம் அனுமதி கோருவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More