செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நத்தார் தின நினைவு முத்திரை பிரதமர் தலைமையில் வெளியிடப்பட்டது!

நத்தார் தின நினைவு முத்திரை பிரதமர் தலைமையில் வெளியிடப்பட்டது!

1 minutes read

முத்திரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரி மாளிகையில் வைத்து நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டது.

முதலில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவினால் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை, வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து டளஸ் அழகப்பெரும, நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறையை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கி வைத்தார்.

அதாவது 45 ரூபாய் மற்றும் 15 ரூபாய் பெறுமதியான முத்திரைகளே இவ்வாறு வெளியிடப்பட்டன.

சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவில் முத்திரை வடிவமைப்பு போட்டியில் வெற்றிபெற்ற கந்தானை புனித செபஸ்தியன் மகா வித்தியாலயத்தின் நிமேஷ் சமத் பெரேரா மாணவன் மற்றும் நுகேகொட அனுலா வித்தியாலயத்தின் ஷினாலி ருவண்யா பீரிஸ் மாணவி ஆகியோரின் சித்திரங்களை கொண்டே இம்முறை நத்தார் தின நினைவு முத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்

புனித செபஸ்தியன் மகா வித்தியாலயத்தின் நிமேஷ் சமத் பெரேரா மாணவனினால் வரையப்பட்ட பிரதமரின் உருவப்படம் இதன்போது அம்மாணவரினால் பிரதமருக்கு வழங்கப்பட்டது. கனிஷ்ட பிரிவில் வெற்றிபெற்ற நுகேகொட அனுலா வித்தியாலயத்தின் ஷினாலி ருவண்யா பீரிஸ் மாணவியும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More