செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நல்லூர் பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்!

1 minutes read

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆளுகைக்குற்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று (செவ்வாய்க்கிழமை) தவிசாளர் ப.மயூரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்கள், சுயேச்சை குழுவின் 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தல ஒரு உறுப்பினர் என 12 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதே வேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்கள் என 8 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தர்.

இதனால் தவிசாளரினால் கொண்டுவரப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் 6 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் 5 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் 4 உறுப்பினர்களும், சுயேட்சை குழு சார்பில் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தல ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More