செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு!

இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு!

1 minutes read

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும்747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 73 ஆயிரத்து 649ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 5 இலட்சத்து 45 ஆயிரத்து 433 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 13 ஆயிரத்து 575 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 14 ஆண்களும், 13 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 641 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More