செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மின் விநியோகத் தடை குறித்த முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் மின் விநியோகத் தடை குறித்த முக்கிய அறிவிப்பு!

0 minutes read

நாட்டின் எந்த பகுதிகளிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மின்சார விநியோகத் தடை ஏற்பபடமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் மின்பிறப்பாக்கி செயலிழந்தமையால், கடந்த சில நாட்களாக நாட்டின் சில பிரதேசங்களில் மாலை 6 மணி முதல் 9.30 வரையான காலப்பகுதியில் அரை மணிநேரம் மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், குறித்த செயலிழந்த மின்பிறப்பாக்கியை வழமைக்கு கொண்டு வரும் தொழிற்பாடுகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக இன்று முதல், மின்சாரத் துண்டிப்பு இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More