செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புஸ்ஸலாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

புஸ்ஸலாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

0 minutes read

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் புஸ்ஸலாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பெண் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற முச்சக்கரவண்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 9.45 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து, புஸ்ஸலாவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, அதில் பயணித்த பெண் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ் விபத்து தொடர்பில் புஸ்ஸலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொன்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More