செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவு -முள்ளிவாய்க்கால் பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு

முல்லைத்தீவு -முள்ளிவாய்க்கால் பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு

1 minutes read

முல்லைத்தீவு -முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு சன சமூக மண்டபத்திற்கு அருகில் நேற்றைய தினம்(2) நபரொருவர் காணியை துப்பரவு செய்துள்ளார்.
இதன்போது குறித்த பகுதியில் கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்த அவர்உடனடியாக முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.


இதையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் அங்கு ஆய்வுகளை மேற்கொண்ட போது 176 கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் அப்பகுதிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து அப்பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு பெறும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More