செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க. மோகனுக்கு விளக்மறியல் நீடிப்பு

மட்டு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க. மோகனுக்கு விளக்மறியல் நீடிப்பு

1 minutes read

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ்உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை எதிர்வரும்  6ஆம் ததிகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு  ஏறாவூர்  சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி    நேற்று புதன்கிழமை (23)   காணொளி மூலம் உத்தரவிட்டார்.

இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவுவேற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் 3ஆம் திகதி  தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கபபட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஏறாவூர் பொலிசார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில்   நேற்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது  கொரோனா காரணமாக நீதிமன்றத்துக்கு அழைத்துவரமுடியத காரணத்தினால் காணொளி மூலம் அவரை தொடர்ந்து எதிர்வரும் எப்பிரல் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  

இதேவேளை பயங்கரவாத தடைச்சட்ட திருத்த மூலம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உரையாற்றும் போது தமிழ் உணர்வாளர் மைப்பின் தலைவர் க. மோகன் கைது தொடர்பாக தெரிவித்தார் அதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் தான் உடனடியாக கவனத்தில் கொண்டுவருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More