செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நிபந்தனைகளுடன் பிரதி சபாநாயகர் பதவி ஏற்ற|சியம்பலாபிட்டிய

நிபந்தனைகளுடன் பிரதி சபாநாயகர் பதவி ஏற்ற|சியம்பலாபிட்டிய

1 minutes read

அண்மையில் தனது பதவியில் இருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை கையளித்திருந்த பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இன்றையதினம் (08) தொடர்ந்தும் குறித்த பதவியில் நீடிப்பது தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதன்போது, இரண்டு நிபந்தனைகளின் கீழ் குறித்த பதவியில் தொடர்ந்தும் செயற்பட தீர்மானத்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

அதற்கமைய, தனது முதலாவது நிபந்தனையாக ஏப்ரல் மாதம் இறுதி வரை மாத்திரம் குறித்த பதவியில் நீடிக்க முடிவு செய்துள்ளதாக, ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இரண்டாவது நிபந்தனையாக, தான் இராஜினாமா கடிதத்தை கையளித்த ஏப்ரல் 05ஆம் திகதி முதல், பிரதி சபாநாயகர் பதவிக்கான எந்தவொரு சிறப்புரிமைகளையும் பயன்படுத்தப் போவதில்லை என அவர் இ்தன்போது குறிப்பிட்டார்.

அது மாத்திரமன்றி அவ்வாறு சிறுப்புரிமையை பெறும் பட்சத்தில் அதற்கான கட்டணத்தை அறவிடுமாறு, கணக்காய்வாளருக்கு அறிவுறுத்துமாறும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More