செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 05 செல்வந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை|ரணில்

05 செல்வந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை|ரணில்

1 minutes read

நாட்டில் நிலவும் உணவு நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க ஐந்து செல்வந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதற்கிணங்க அவர், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடு எதிர்காலத்தில் மேலும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி வரும் என மேற்படி நாடுகள் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளன.

அந்த வகையில் இலங்கைக்கு எவ்வாறு உதவமுடியுமென தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அந்த நாடுகள் முன்னாள் பிரதமரிடம் தெரிவித்துள்ளன. அதேவேளை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடொன்றை எட்டுமானால் இலங்கைக்கு இலகுவாக உதவ முடியும் என்றும் அந்த ஐந்து நாடுகளினதும் பிரதிநிதிகள் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More