இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாக வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இந்த நிதியை இந்தியா வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே அமைச்சர் ஜீ எல் பிரிஸ் இவ்விடயத்தை கூறியுள்ளார்.அதேவேளை பங்களாதேஷுக்கு வழங்க வேண்டிய 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துவதற்கான மேலதிக கால அவகாசம் வழங்க அந்த நாடு இணக்கம் தெரிவித்துள்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தமக்கு கிடைக்கப்பெற 06 மாதகாலங்கள் செல்லும் எனவும், அந்த நிதியும் பகுதி பகுதியாகவே நாட்டிற்கு கிடைக்கப்பெறும் எனவும் அமைச்சர் ஜீ எல் பீரிஸ் கூறியுள்ளார்.