செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மின்கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கவில்லை | அமைச்சரின் விருப்பத்திற்கமைய அதிகரிக்க முடியாது

மின்கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கவில்லை | அமைச்சரின் விருப்பத்திற்கமைய அதிகரிக்க முடியாது

1 minutes read

மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை.

நிறைவேற்றுத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரின் விருப்பத்திற்கமைய மின்கட்டணத்தை அதிகரிக்க முடியாது.

அத்துடன் நள்ளிரவில் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிப்பதை போன்று மின்கட்டணத்தை அதிகரிக்க முடியாது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு முழுமையாக அனுமதி வழங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது.

மின்கட்டண அதிகரிப்பிற்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை நள்ளிரவில் அதிகரிக்கப்படுகிறது.

அடுத்த நாள் தான் விலையதிகரிப்பை அறிந்துக்கொள்கிறோம். அதுபோல் மின்கட்டணத்தை நள்ளிரவில் அதிகரிக்க முடியாது.

அத்துடன் நிறைவேற்றுத்துறை ,மின்சாரத்துறை அமைச்சரின் விருப்பத்திற்கமைய மின்கட்டணத்தை அதிகரிக்கவும் முடியாது.

மின்கட்டணம் அதிகரிப்பிற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதி அத்தியாவசியமானது என மின்சாரத்துறை தொடர்பான சட்டத்தின் 30 ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

மின் உற்பத்திக்கான செலவு கடந்த காலத்தை காட்டிலும் அதிகரிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம்.

மின்சாரத்துறையின் வருமானம் மற்றும் செலவு ஆகியவற்றிற்கான இடைவெளியை சமநிலைப்படுத்தும் யோசனையை இலங்கை மின்சார சபை முன்வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

மின்கட்டணம் தொடர்பிலான யோசனை முன்வைக்கப்பட்டால் அது முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டு பொதுசன அபிப்ராயம் கோரப்படும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More