செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 5 நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்தவர் உயிரிழப்பு.

5 நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்தவர் உயிரிழப்பு.

1 minutes read

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் பல மணிநேரம் அல்லது பல நாட்களாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு எரிபொருளுக்காக காத்திருக்கும் போது பல உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், இன்று (23) களுத்துறை மாவட்டத்தில் ஹொரண, அங்குருவதொட்ட, படகொட பகுதியில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த 60 வயதுடைய நபராருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் எரிபொருளை பெற்றுக்கொள்ள கடந்த 5 நாட்களாக வரிசையில் காத்திருந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதுவரை எரிபொருள் வரிலையில் காத்திருந்து 14 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More