செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கடற்படை சிப்பாயின் துப்பாக்கியை அபகரிக்க முற்பட்ட மூவர் கைது

கடற்படை சிப்பாயின் துப்பாக்கியை அபகரிக்க முற்பட்ட மூவர் கைது

1 minutes read

ஜா-எல, ஏக்கல பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாயின் கையிலிருந்த துப்பாக்கியை அபகரிக்க முற்பட்ட நபர்  உள்ளிட்ட மூன்று பேரை ஜா-எல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 22 ஆம் திகதியன்று இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது சந்தேகநபர்களில் ஒருவர், எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  பாதுகாப்புக் கடைமையில் ஈடுபட்டிருந்த கடற்படை  சிப்பாய் ஒருவரின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளார்.

இந்த சம்பவம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமெராவில் தெளிவாக பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  ஆர். எம். ஜி. டி. ரத்நாயக்கவின் தலைமையில் முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சம்பத் திஸாநாயக்க, பொலிஸ் சார்ஜன்ட் (35599) வன்னிநாயக்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் (24346) சில்வா ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More