செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எரிவாயு சிலிண்டர்கள் ஜூலை 06 வரை இல்லை

எரிவாயு சிலிண்டர்கள் ஜூலை 06 வரை இல்லை

1 minutes read

சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை 05 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இரண்டு கப்பல்களில் 7,000 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு நாட்டை வந்தடையவுள்ளது.

அந்தக் கப்பல்களிலுள்ள எரிவாயு கிடைக்கும் வரை கையிருப்பில் குறைந்தளவேனும் எரிவாயு இல்லையென லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்த மாதம் 10 ஆம் திகதியின் பின்னர் 25,000 மெற்றிக் தொன் எரிவாயு தாங்கிய பாரியதொரு கப்பல் மாலைத்தீவு கடற்பகுதியை அண்மிக்கவுள்ளது.

அங்கிருந்து சிறு கப்பல்கள் ஊடாக தொடர்ச்சியாக எரிவாயுவை நாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் 05 ஆம் திகதியின் பின்னர் நாளாந்தம் 12.5 கிலோ 80,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More