செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலய தீர்த்தம் எடுக்க தடை | 591ஆவது படை

வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலய தீர்த்தம் எடுக்க தடை | 591ஆவது படை

1 minutes read

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுப்பதற்காக முல்லைத்தீவு பெருங்கடலை நோக்கி அடியவர்கள் சென்றபோது தீர்த்தக்கரை வீதியை மறித்து 591ஆவது படைப்பிரிவின் 12 S L L I படைப்பிரிவு இராணுவத்தினர் தீர்த்தம் எடுப்பதை தடை செய்துள்ளனர். 

குறித்த வீதி ஊடாக இராணுவத்தினர் தீர்த்தம் எடுக்க செல்ல விடாததன் காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டது.

ஒன்பது முப்பது மணி வரை அவர்கள் தீர்த்தம் எடுக்க சம்மதிக்காத நிலையிலே அந்த இடத்தில் ஒன்றுகூடி இருந்த மக்கள் முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியில் வட்டுவாகல் பாலத்திற்கு அருகாமையில் வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்திற்கு சொந்தமான காணியை அபகரித்து வீதி தடை ஏற்படுத்தியிருந்த இடத்திற்கு வருகை தந்து இராணுவத்தினரை ஆலய கடமைகளுக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் ஆலய காணியில் இருந்து வெளியேறுமாறு மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More