செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விரைவில் இலங்கைக்கு அறிமுகமாகும் மின்சார பஸ்

விரைவில் இலங்கைக்கு அறிமுகமாகும் மின்சார பஸ்

1 minutes read

UNDP நிறுவனமும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து மின்சாரத்தில் இயங்கும் பஸ் மற்றும் முச்சக்கரவண்டிகளை சேவையிலீடுபடுத்துவதற்கான செயற்றிட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

எரிபொருள்நெருக்கடி மற்றும் சுற்றாடல் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் பஸ் வண்டிகள்

அமைச்சர் பந்துல தலைமையில் விசேட கூட்டத்தில் ஆராய்வு மற்றும் முச்சக்கர வண்டிகளை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான முதலாவது பேச்சுவார்த்தை அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் UNDP நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். நாட்டில் 10இலட்சத்திற்கும் அதிகமான முச்சக்கரவண்டிகள் சேவையிலுள்ளன.

அந்த முச்சக்கர வண்டிகளை மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றுவதன் மூலம் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண முடிவதுடன் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதுதொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

UNDP நிறுவனத்தின் செயற்றிட்டமாக நடைமுறைப்படுத் தப்படவுள்ள E-Mobility வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வருடத்திற்குள் 300 முச்சக்கரவண்டிகளை மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றம் செய்வதற்கும் அதற்கான முறைமையொன்றை தயாரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முழுமையான செயற்றிட்டத்துக்காக 03 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை UNDP நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

அதற்கு மேலதிகமாக கொழும்பு நகர்ப்புறங்களில் மின்சாரத்தில் இயங்கும் பஸ் வண்டிகளை சேவையிலீடுபடுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More