களுத்துறை – மத்துகம, பின்னகொட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பிரிதொரு தரப்பினருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலைக்கான காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூரிய ஆயுதத்தினால் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த நபர் வென்னேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 43 வயதுடைய பின்னகொட, அகலவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவர். இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மதுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.