நிந்தவூர் பிரதான வீதியில் துரைமூலை என்னும் இடத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனத்தில் மோதுண்டு நேற்று காலை ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
காத்தான்குடி-5, மீராப்பள்ளி வீதியைச் சேர்ந்த 23வயது அக்பர் அலி பாத்திமா அஸ்பா என்ற மாணவியே மரணமானவராவார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட விடுதி மாணவியான இவர் இரண்டாவது பருவகால அமர்வின் பொருட்டு தனது கணவருடன் காத்தான்குடியிலிருந்து நேற்று காலை 6.00மணியளவில் புறப்பட்டு நிந்தவூரினூடாக பல்கலைக்கழகத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தபோதே வாகனத்தில் மோதுண்டு காலமானார்.
விபத்து தொடர்பில் சம்மாந்துறை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இம்மாணவி திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் இப்பரிதாப மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.