சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு முன்னர் உரிய உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டாலும், அதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னர் மற்ற கடன் வழங்கிய நாடுகளுடன் கலந்துரையாடல்கள் நடக்க வேண்டும் என்றும் அவர்களின் அறிக்கைகளும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
எல்லா தகவல்களும் கிடைத்த பிறகு அமைச்சரவைக்கு விளக்கம் அளிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆர்வமுள்ள கட்சிகள் மாநாட்டில் பங்கேற்கலாம் என்றும் ஜனாதிபதி தன்னிடம் கூறியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.