யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை திருடிய நபரொருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கோண்டாவில் பகுதியில் வைத்து சந்தேக நபர் சனிக்கிழமை (ஒக் 8) கைதுசெய்யப்பட்டார்.
குறித்த நபர் வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.
கோப்பாய் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேக நபரிடமிருந்து 10 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் 3 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.