செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாணவன் வரலாற்றுச் சாதனை | சமூகத்தால் கோலாகல வரவேற்பு

மாணவன் வரலாற்றுச் சாதனை | சமூகத்தால் கோலாகல வரவேற்பு

2 minutes read

கிளி/ முக்கொம்பான் மகா வித்தியாலய வரலாற்றில் முதல் தடவையாக மாணவன் செல்வன் .ஏ.முகிலன் க.பொ.த உ.த 2021 தேர்வில் 3A சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையைப் பெற்றமையையிட்டு பாடசாலைச் சமூகத்தால் நடாத்தப்பட்ட பாராட்டு விழா நடாத்தப்பட்டது.

இந் நிலையில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய மாணவனுக்கு பாடசாலை சமூகமும் பிரதேச மக்களும் கோலாகல வரவேற்பு வழங்கி மாணவனுக்கு மகிழ்வையும் பெருமையையும் வழங்கியுள்ளனர்.

அதேவேளை நிகழ்வில் பிரதம விருந்தினராக பூநகரி கோட்ட கல்விப் பணிப்பாளர் திரு. நா.கணேஸ்வரநாதன் கலந்துகொண்டு வாழ்த்தினார். நிகழ்வில் பாடசாலை சமூகத்தினருடன் பிரதேச மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கிளிநொச்சி நகரத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள முக்கொம்பான் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகும். விவசாயத்தை வாழ்வாதாரத் தொழிலாக கொண்ட இப் பகுதியில் மாணவர்கள் கல்வி மீது பெரும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதை இச் சாதனை கட்டியம் கூறுகிறது.

மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்த முகிலன், எட்டியுள்ள சாதனை கிளிநொச்சி மாவட்ட மாணவர்களுக்கு மாத்திரமின்றி தமிழர் தேசத்தில் உள்ள அத்தனை பின்தங்கிய கிராம மாணவர்களுக்கும் ஊக்கம் தருகின்ற சாதனையாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More