செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சாரதி அனுமதிப்பத்திர முறைமையில் மாற்றம்

சாரதி அனுமதிப்பத்திர முறைமையில் மாற்றம்

1 minutes read

சாரதி செய்யும் தவறுகளுக்கு புள்ளிகளை குறைத்து அதனுடன் தொடர்புடைய தண்டனைகளை விதிக்கும் முறைமை அடுத்தவருடம் முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

வீதியில் வாகனங்களை செலுத்தும் போது தவறு செய்யும் சாரதிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரத்தின் கீழ் 24 புள்ளிகளுக்கு உட்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

ஒரு ஓட்டுநர் 24 புள்ளிகள் வரம்பை அடைந்தவுடன், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும், மேலும் அவர் மீண்டும் சாரதி அனுமதி பாத்திரத்தை பெற்றுக்கொள்ள பரீட்சை மற்றும் பயிற்சி மூலம் உரிமத்தை மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரம் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்த பின்னர் வெளியிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More