செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3 இலட்சம் ரூபா தண்டம்!

யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3 இலட்சம் ரூபா தண்டம்!

1 minutes read

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பலசரக்குக் கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 12 உரிமையாளர்களுக்கு யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றம் 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது. 

யாழ் நகர்ப் பகுதியில் 6 பலசரக்கு கடைகள்,  குருநகர் பகுதியில் 5 பலசரக்கு கடைகள் மற்றும் வண்ணார்பண்ணை பகுதியில் ஒரு கடை ஆகிய 12 கடைகளிலும் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நிலையில், அதன் உரிமையாளர்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. 

குறித்த வழக்கு இன்று புதன்கிழமை (நவ 30) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 12 வர்த்தகர்களும் தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

அடுத்து அந்த 12 பேருக்கும் 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மேலதிக நீதவான், சான்று பொருட்களாக மன்றில் ஒப்படைக்கப்பட்ட காலாவதியான பொருட்களை அழிக்குமாறும் உத்தரவிட்டார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More