செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் தடம்புரண்டது சொகுசு பஸ்! – 22 பேர் காயம்

கிளிநொச்சியில் தடம்புரண்டது சொகுசு பஸ்! – 22 பேர் காயம்

1 minutes read

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பஸ் கிளிநொச்சி, 155ஆம் கட்டைப் பகுதியில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி – இரணைமடு அருகில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த 22 பேரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More