செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரணிலுடன் சஜித் இணைய வேண்டும்! – ஹரின் வலியுறுத்து

ரணிலுடன் சஜித் இணைய வேண்டும்! – ஹரின் வலியுறுத்து

1 minutes read

“ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படாவிட்டால் சஜித் பிரேமதாஸவின் அரசியல் எதிர்காலம் இல்லாமல் போய்விடும்.”

– இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“சஜித் பிரேமதாஸ தன்னைத் திருத்திக்கொண்டு ஜனாதிபதியுடன் மீண்டும் இணைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

தனித்துப் பயணிக்க முடியாது என்பது ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்களுக்கும் தெரியும். எனினும், குழப்பம் விளைவிக்கும் ஒரு சிலர் உள்ளனர்.

எது எப்படியோ இணைந்து பயணிக்காவிட்டால் சஜித்தின் அரசியல் எதிர்காலம் இல்லாமல்போய்விடும். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் அரசுடன் இணைவதற்குத் தயாராகவே உள்ளனர். உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது இன்னும் ஒரு வாரத்துக்குள் தெரியவரும்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More