செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை – இந்தியாவிற்கிடையில் பயணிகள் கப்பல் சேவை

இலங்கை – இந்தியாவிற்கிடையில் பயணிகள் கப்பல் சேவை

1 minutes read

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே பயணிகள் கப்பல் சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. இக்கப்பல் சேவையானது காங்கேசன்துறை துறைமுகத்தையும் தமிழ்நாட்டின் புதுச்சேரியையும் இணைப்பதாக அமையவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சர்வதேச ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சேவைக்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த பயணிகள் கப்பல் சேவையானது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்தவும் வாய்ப்பாகவும் அமையும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலை மற்றும் கொழும்பு வரையும் பின்னர் குறித்த கப்பல் சேவைகள் விஸ்தரிக்கப்படும். அதற்கமைய துறைமுகங்களில் சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பான உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த சேவையின் கீழ் உள்ள கப்பல்கள் 300 முதல் 400 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியவையாக அமையும் என்பதோடு , பயணத்திற்கு மூன்றரை மணித்தியாலங்கள் செல்லும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More