செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கடலுக்குச் சென்ற மீனவர் மாயம்! – படகு மாத்திரம் மீட்பு

கடலுக்குச் சென்ற மீனவர் மாயம்! – படகு மாத்திரம் மீட்பு

0 minutes read

யாழ்., பலாலி வடக்கு, அன்ரனிபுரத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் இன்னமும் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

49 வயதுடைய இராயப்பு றொபேட் கெனடி என்ற மீனவரே காணாமல்போயுள்ளார் என்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மயிலிட்டித் துறைமுகத்திலிருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தொலைவில், காணாமல்போனதாகக் கூறப்படும் மீனவரின் படகு கவிழ்ந்திருந்த நிலையில் கடற்றொழிலாளர்கள் மீட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் மீனவர் காணாமல்போன நிலையில், அவர் பணித்த படகு நேற்று மீட்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More